பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0 0
Read Time:1 Minute, 41 Second

ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் 28.04.2024  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் சதீஸ்வரன் நிதுசா அவர்கள் ஏற்றிவைக்க ஆனந்தபுர நாயகர்களுக்கான ஈகைச்சுடரினை 01.02.1998, கிளிநோச்சியில் வீரச்சாவடைந்த வீரவேங்கை வேணி அவர்களின் சகோதரி , 25.03.2009, ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த லெப் கானக்கதிர் அவர்களின் தாயார், 2009 ஆனந்தபுரத்தில் வீரச்சாவடைந்த மேஜர் கிருபன் அவர்களின் சகோதரி, 11.06.1990 , காங்கேசன்துறையில் வீரச்சாவடைந்த மேஜர் விவேகன் அவர்களின் சகோதரி, 14.07.1995, சண்டிலிப்பாய்- அளவெட்டிப் பகுதியில் வீரச்சாவடைந்த கப்டன் அருந்ததி அவர்களின் சகோதரி, 14.05.1985, வில்பத்து காட்டுப் பகுதியில் வீரச்சாவடைந்த லெப். பிரசன்னா அவர்களின் சகோதரர் ஆகியோர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment